Saturday, April 20, 2024

அதிரையிலிருந்து வெளியேற்றப்பட்ட வடமாநில தொழிலாளர்கள் !(படங்கள்)

Share post:

Date:

- Advertisement -

கொரோனா வைரஸால் நாடு முழுவதும் 4வது முறையாக வரும் மே 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் அடிப்படை வசதிகள் கேட்டு ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தேசிய அளவில் பலரின் கவனத்தை பெற்றது.

இதனால் தங்கள் மாநில தொழிலாளர்களை திரும்ப அழைத்துக்கொள்ள அனைத்து மாநில அரசுகளும் சம்மதித்தன. இதனையடுத்து தமிழகத்தில் உள்ள வடமாநில தொழிலாளர்கள் படிப்படியாக சொந்த ஊர் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில் அதிரையிலும் தங்கி இருந்து பல்வேறு வேலைகள் செய்து வந்த 141 வடமாநில தொழிலாளர்கள் இன்று காலை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதிரையில் இருந்து இன்று காலை 7 மணியளவில் 4 அரசு சிறப்பு பேருந்துகளில் முறையான அடையாள அட்டைகளுடன் அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

அதிரையில் இருந்து புறப்படும் அவர்கள், பட்டுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம் சென்று பின்னர் தஞ்சை சென்று அங்கிருந்து சிறப்பு ரயில் மூலம் சொந்த ஊர்களுக்கு திரும்ப உள்ளனர். மாஸ்க் அணிந்து பேருந்துக்கு ஒரு காவலர் என பல்வேறு நடவடிக்கைகளுடன் அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். வடமாநில தொழிலாளர்களை காவல்துறையினர், கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் கட்டிட பொறியாளர்கள் உள்ளிட்டோர் வழியனுப்பி வைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...