Thursday, March 28, 2024

கொரோனா ஊரடங்கில் இலவச சிகிச்சையளித்த இளம் மருத்துவர்…

Share post:

Date:

- Advertisement -

தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணம் புதுமனைத்தெருவை சேர்ந்த, அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி பேராசிரியர் சேக் அப்துல் காதர் அவர்களின் மகன் ஜியாவுர் ரஹ்மான்.இவர் மருத்துவம் முடித்து பல்வேறு வகையில் பொதுமக்களுக்கு இலவச மருத்துவ ஆலோசனைகளும்,சேவைகளும் செய்து வருகிறார்.

கொரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் மல்லிப்பட்டிணம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இயங்கி வந்த தனியார் மருத்துவமனைகள் மூடப்பட்டன.இதனால் மருத்துவ சிகிச்சைக்கு பொதுமக்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வரக்கூடும் என்பதால் தான் பெற்ற மருத்துவ கல்வி கொண்டு பலருக்கு மருத்துவ சிகிச்சை மற்றும் மருத்துவ ஆலோசனைகளை இலவசமாக அளித்து வந்தார்.

தன்னுடைய வீட்டிலே மருத்துவ பணிகளை மேற்கொண்டு வந்தார்.அனைத்து சமுதாய மக்களுக்கும் சுமார் 1000க்கும் மேற்பட்ட மக்களுக்கு இலவச சிகிச்சைகளை அளித்திருக்கிறார்.இதனால் பொதுமக்கள் மத்தியில் பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும் குவிந்த வண்ணம் இருக்கின்றன.

இவர் ஏற்கனவே கஜா புயலின் போதும் இலவச மருத்துவ சிகிச்சையை பொதுமக்களுக்கு செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...