அதிராம்பட்டினம் அருகே உள்ள முடுக்குகாடு கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வீடு ஒன்று தீ விபத்தால் முழுமையாக எரிந்து சேதமடைந்தது.
இதனால் அவ்வீட்டில் இருந்த குடும்பத்தினர் மிகவும் பாதிப்புக்கு உள்ளானார்கள். இதனை அறிந்த அதிராம்பட்டினம் ரெட்கிராஸ் சொசைட்டியின் அமைப்பினர் வாழ்வாதார உதவிகளாக மளிகை பொருட்கள், போர்வைகள், பாய், நிதி உதவி உள்ளிட்டவைகளை வழங்கினர்.
இதில் IRCS சேர்மன் மரைக்கா K. இதிரிஸ் அஹமது, துணை சேர்மன் ஆறுமுகசாமி, செயலாளர் சூப்பர் அப்துல் ரஹ்மான், பொருளாளர் அகமது மன்சூர் மற்றும் உறுப்பினர்கள் திரு.பாஞ்சாலன், அப்துல் ஹலீம், சைபுதீன் ஆகியோர் பங்கேற்று உதவிகளை வழங்கினர்.