Friday, April 19, 2024

முதல் முறையாக ட்ரம்பின் முடிவை நிராகரித்த அமெரிக்க ராணுவம்

Share post:

Date:

- Advertisement -

அமெரிக்க அதிபர் ட்ரம்பை அந்நாட்டு ராணுவ தலைமையகமான பென்டகன் முதல்முறையாக எதிர்க்க தொடங்கியது டிரம்பிற்கு அதிர்ச்சியளித்துள்ளது.

அமெரிக்காவில் கடந்த 24ம் தேதி ஜார்ஜ் பிளாய்ட் என்ற கருப்பின இளைஞரை போலீசார் கைது செய்து அழைத்து செல்லும் போது கழுத்தை நெரித்தலில் சம்பவ இடத்திலேயே ஜார்ஜ் பலியானார். இந்த கொடூரத்திற்கு எதிராக 8வது நாளாக அமெரிக்காவில் மிக கடுமையான போராட்டங்கள் நடந்து வருகிறது.

இதனால் அங்கு ஏற்பட்ட போராட்டங்களை கட்டுப்படுத்தும் வகையில் தேசிய பாதுகாப்பு படைகள் குவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் போராட்டங்களை ஒடுக்கும் முயற்சியாக ராணுவத்தை களமிறக்க போவதாக டிரம்ப் எச்சரித்திருந்தார். Insurrection Act சட்டப்படி, வாஷிங்டன் உள்ளே ராணுவத்தை களமிறக்க ட்ரம்ப் முடிவு செய்து, இதற்காக 700 வீரர்கள் விமானம் மூலம் வாஷிங்டன் வந்தனர்.

ஆனால் இவர்கள் களமிறங்கிய 30 நிமிடத்தில் வாஷிங்டனுக்கு வெளியே இருக்கும் ராணுவ மையத்திற்கு மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டார்கள். ட்ரம்பின் இந்த திடீர் பின்வாங்குதலுக்கு காரணம், ராணுவத்தை களமிறக்குவது தொடர்பான அமெரிக்க அதிபர் ட்ரம்பின் முடிவை அந்நாட்டு ராணுவ தலைமையகம் பென்டகன் கடுமையாக எதிர்த்து உள்ளது.

அமெரிக்க மண்ணில் ராணுவத்தை கொண்டு வர கூடாது என்று பென்டகன் மிக உறுதியாக கூறி உள்ளது. பென்டகன் தலைவர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் மார்க் எஸ்பர், என்ன நடந்தாலும் ராணுவத்தை உள்ளே கொண்டு வர கூடாது என்று நேரடியாக எதிர்த்துள்ளார். ட்ரம்பை எப்போதும் ஆதரிக்கும் மார்க் எஸ்பர் முதல்முறை நேரடியாக ட்ரம்பை எதிர்த்து உள்ளது டிரம்பிற்கு அதிர்ச்சியளித்துள்ளது.

இந்நிலையில் ஜார்ஜ் பிளாய்ட் மரணத்திற்கு நீதி கேட்டு அமெரிக்காவில் அதிபர் ட்ரம்பிற்கு எதிராக போராட்டங்கள் நாளுக்கு நாள் தீவிரமாகி வருவது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...