தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணம் அருகே செம்பருத்தி நகரில் தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு SDPI கட்சி மாவட்ட தலைவர் முகமது புகாரி நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிவாரணங்களை வழங்கினார்.
மேலும் வீடுகளை இழந்தவர்களுக்கு உடனடியாக மாற்று ஏற்பாடுகளை செய்திட அதிகாரிகளிடம் வலியுறுத்துவதாகவும் கூறினார்.
பாதிகப்பட்டவர்களுக்கு அரிசி,மளிகை மற்றும் காய்கறி பொருட்களை வழங்கினர்.இதில் மாவட்ட செயலாளர் முகமது அஸ்கர்,மாவட்ட செயற்குழு உறுப்பினர் நூருல் இஸ்லாம்,நகரத்தலைவர் அப்துல் பஹத்,நகரச்செயலாளர் ஜவாஹீர் மற்றும் கட்சியின் செயல்வீரர்கள் கலந்துக்கொண்டனர்.