Friday, April 19, 2024

‘நிறம் மட்டுமல்ல மத அடிப்படையிலான பாகுபாடும் இனவாதம்தான்’ – இர்ஃபான் பதான் !

Share post:

Date:

- Advertisement -

அமெரிக்காவில் கறுப்பினத்தைச் சார்ந்த ஜார்ஜ் ஃபிளாய்ட் காவல்துறை அதிகாரியால் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து நாடு முழுக்க கறுப்பின மக்களின் போராட்டம் வெடித்துள்ளது. கொரோனா அச்சத்தையும் மீறி மக்கள் வீதிகளில் போராடி வருகின்றனர்.

இனவாதத்துக்கு எதிரான இந்தப் போராட்டம் மனிதர்களிடையே பாகுபாடு காட்டப்படுவது குறித்த விவாதங்களை உலகம் முழுக்க ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் இர்ஃபான் பதான் தனது ட்விட்டர் பக்கத்தில், ”இனவாதம் என்பது தோலின் நிறத்தின் அடிப்படையிலானது மட்டுமல்ல. வேறு சமய நம்பிக்கையைச் சார்ந்தவர் என்பதாலேயே ஒரு சமூகத்தில் வீடு வாங்குவதற்கு உங்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதும் இனவாதத்தின் ஒரு வடிவம்தான்” என்று பதிவிட்டுள்ளார்.

இது அவரது சொந்த அனுபவத்திலிருந்து சொல்லப்பட்ட கருத்தா என்று செய்தி நிறுவனம் ஒன்று கேட்டதற்குப் பதிலளித்த இர்ஃபான் பதான், ”இது நான் கவனித்த விஷயம். யாராலும் இதை மறுக்க முடியாது என்று நினைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...