தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணம் துறைமுகத்திற்குள் மாலை நேரங்களில் நுழைய தடை.
தமிழகம் முழுவதும் கொரோனா அதிகரித்து வருகிறது,அதேப்போல தஞ்சை மாவட்டத்திலும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.இந்நிலையில் அதிகமான வெளியாட்கள்,வெளியூர் நபர்கள் துறைமுகத்தில் வந்து செல்கின்றனர்.இதனால் மல்லிப்பட்டிணம் பகுதி மக்கள் மத்தியில் ஒருவித அச்சம் நிலவியது.துறைமுகத்தை வாயில்களை மாலை நேரங்களில் மூட நண்பர் குழுவினர் ஏற்கனவே மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.
இந்நிலையில் மீன்வள உதவி இயக்குனர் M.சிவக்குமார் முன்னிலையில் மீன்பிடி துறைமுக மேலாண்மை கூட்டம் நடைப்பெற்றது.அதில் பலதரப்பட்ட மக்களின் கோரிக்கையை ஏற்று மாலை 4 மணி முதல் 8 மணி வரை துறைமுகத்திற்குள் வெளியாட்களுக்கு அனுமதியில்லை என்றும்,ஒருவர் மட்டுமே செல்லக்கூடிய வாயில் மட்டுமே திறந்திருக்கும் என்று தீர்மானிக்கப்பட்டது.