Home » அதிரையில் திமுக கலந்தாலோசணை கூட்டம்!!

அதிரையில் திமுக கலந்தாலோசணை கூட்டம்!!

by admin
0 comment

அதிரை எக்ஸ்பிரஸ்:-தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டிணம் திமுகவின் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் பேரூர் செயலாளர் இராம.குணசேகரன் வரவேற்புரை ஆற்றினார் இந்நிகழ்ச்சியில் SP சோடிமுதலி தலைமை தாங்கினார்.மரைக்கா இத்ரீஸ் (சிறுபான்மை அமைப்பாளர்) ,S. இன்பநாதன் (மாவட்ட பிரதிநிதி),NKS.சபிர் (EX ஒன்றிய ) ஆகியோர் முன்னிலை வகித்தனர்

கூட்டத்தில் கழகத்தின் முன்னோடிகள் மறைந்த V. M. பாலகிருஷ்ணன்,A. ஆறுமுகம்,தாமக பொது குழு உறுப்பினர் M M S பஷீர் அகமது அவர்களுக்கு ஒரு நிமிடம் இரங்கல் தெரிவித்தனர.

கூட்டத்தில் இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நியாய விலைக்கடைகளில் சர்க்கரை விலை உயர்வு மற்றும் பருப்பு வழங்குதல் நிறத்தத்தை கண்டித்து 22.11.2017 அனைத்து நியாய விலைக்கடைகள் முன் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று தீர்மானம் எடுக்கப்பட்டது.

வாக்காளர் சரிபார்ப்பில் கட்சியினர் தீவிரமாக திமுகவினர் பணியாற்ற வேண்டும் என முடிவெடுத்தனர்.
இறுதியாக இந்த நிகழ்ச்சியில் சி. தில்லைநாதன் நன்றியுரை நிகழ்த்தினார்.

இந்நிகழ்ச்சியில்  நகர செயற்குழு உறுப்பினர் மற்றும் வார்டு செயலாளர் மு.முகமது ஷரிஃப், முன்னாள் கவுன்சிலர் செய்யது முஹம்மது ,முஹம்மது இப்ராகிம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter