Tuesday, April 16, 2024

அதிராம்பட்டினத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் போராட்டம்…!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான நல சங்கத்தின் சார்பாக  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகரத்தலைவர் B. நமது அஷ்ரப்   தலைமை தாங்கினார், தஞ்சை மாவட்ட தலைவர் பஹாத் முஹம்மது முன்னிலை வகித்தார்.

மத்திய மாநில அரசுகள் கொரோனா நிவாரண நிதி மாற்றுத்திறனாளிகளுக்கு 5,000 ரூபாய் தர வேண்டும், மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாள் வேலைத் திட்டத்தில் 200 நாட்களாக உயர்த்தி மற்றும் 4 மணி நேரமே வேலை பார்க்க வைத்து முழு ஊதியத்தையும் 256 ரூபாய்கொடுத்தாக வேண்டும்.,தமிழ்நாடு அரசு அறிவித்த கொரோனா நிவாரண நிதி ஆயிரம் ரூபாய் மாற்றுத்திறனாளிக்கு கொடுத்ததில் குளறுபடி,முகவரி குளறுபடி அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் நிவாரண நிதி ஒழுங்கு முறையாக வரவில்லை. ஆதலால் மாற்றுத்திறனாளிகள் பட்டியலை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உடனடியாக சரி பார்த்து அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் ஆயிரம் ரூபாய் நிவாரண நிதி வழங்க வேண்டும் உள்ளிட்ட  கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் நகரச் செயலாளர் A M F ஜாபாஃர் சாதிக், நகர பொருளாளர் N ஜாமால் முகமது மற்றும் மாற்றுத்திறனாளிகள் பலரும் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...

மரண அறிவிப்பு : ஹாஜிமா சிராஜ் ஃபாத்திமா அவர்கள்.!!

ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த மர்ஹூம் M.மஹ்மூது அலியார் ஹாஜியார் அவர்களின் மகளும்,...

அதிரையில் தென்பட்டது ஷவ்வால் பிறை! நாளை நோன்பு பெருநாள்!

உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தில் நோன்பிருப்பது கடமையாகும். அந்த...