Thursday, March 28, 2024

பேராவூரணியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நேரக்கட்டுப்பாடு வர்த்தகர் கழகம் அறிவிப்பு!

Share post:

Date:

- Advertisement -

பேராவூரணி, ஜூலை.18-
பேராவூரணியில் அனைத்து வணிக நிறுவனங்களும் ஜூலை 20 ந்தேதி திங்கள்கிழமை முதல் காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மட்டுமே திறக்க வேண்டும். ஹோட்டல்கள் இரவு 8.00 மணி வரை பார்சல் மட்டுமே வழங்க வேண்டும் எனவும்,கடைகளுக்கு முன்பு சானிடைசர் அல்லது சோப்பு மூலம் கைகளை கழுவிய பின்னரே பொதுமக்களை பொருள் வாங்க அனுமதிக்க வேண்டும்.சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வலியுறத்த வேண்டும். கட்டாயம் முக கவசம் ,கையுறை அணிந்து பாதுகாப்பான முறையில் வியாபாரம் செய்ய வேண்டும்.பால் மற்றும் மருந்து கடை வழக்கம் போல் செயல்படும் எனவும் நகர வர்த்தகர் கழகத்தின் சார்பில் அறிவித்துள்ளனர்.இது குறித்து நகர வர்த்தகர் கழக தலைவர் ஆர்.பி.ராஜேந்திரன் கூறியதாவது: பேராவூரணி பகுதியை சுற்றியுள்ள பல்வேறு ஊர்களில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாக பரவி வருவதால் முழு அடைப்பு நடைபெற்று வருகிறது. நமது நகரத்தில் வர்த்தகர்கள், பொதுமக்கள் நலன் கருதி இந்த நேரக் கட்டுப்பாடு முடிவு எடுக்கப்பட்டுள்ளது.அனைத்து வர்த்தகர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...