Saturday, April 20, 2024

மல்லிப்பட்டிணத்தில் நாளை(ஜூலை.27) முதல் வழக்கம் போல் படகுகள் செல்லும் ஆலோசனை கூட்டத்தில் முடிவு

Share post:

Date:

- Advertisement -

தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம், கல்லிவயல் தோட்டம் விசைப்படகு, நாட்டுப்படகு, மீனவர் சங்க ஆலோசனை கூட்டம் இன்று(ஜூலை.26) காலை 11 மணி அளவில் துறைமுக ஏலக் கூட வளாகத்தில் மீனவர் பேரவை பொதுச்செயலாளர் தாஜூதீன் தலைமையிலும் வடுகநாதன்,கள்ளிவயல் தோட்டம் செயலாளர் இபுராஹீம், சந்திரசேகர்,நீலகண்டன் நாட்டுப்படகு சங்க நிர்வாகிகள்   செய்யதுமுகமது,அப்துல்ரகுமான், ரகுமத்துல்லா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் சேதுபாவாசத்திரம் காவல்துறை ஆய்வாளர் அண்ணாதுரை,மற்றும்கிராம நிர்வாக அலுவலர் தங்கமுத்து ஆகியோர் கலந்துகொண்டனர்.

கொரோனா வைரஸ் தொற்று தஞ்சை மாவட்டத்தில் அதிகமாக பரவி வருவதால் மீன் ஏலம் விடும் இடங்களில் சமூக இடைவெளியுடன் மீன் விற்பனை செய்ய வேண்டும். தனிமனித இடைவெளி மிக முக்கியமாக கடைப்பிடிக்க வேண்டும். கள்ளிவயல் தோட்டப் பகுதியில் உள்ள நாட்டுப் படகு மற்றும் விசைப்படகுகள் துறைமுக வடக்குப் பகுதியிலும் மல்லிப்பட்டினம் ராமர் கோயில் தெரு நாட்டுப்படகு, விசைப்படகுகள் துறைமுக தெற்கு பகுதியிலும் காலை 6 மணிக்கு மேல் மீன் விற்கவேண்டும். வெளியூர் மீன்களை யாரும் கொண்டுவந்து விற்கக்கூடாது.மீறிவிற்பவர் மீது காவல்துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,கட்டாயம் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் மீறுபவர் உடனடியாக நடவடிக்கை எடுத்து அவர்களை துறைமுகத்தை விட்டு வெளியேற்றுவது எனவும் படகுகள் நாளை(ஜூலை.27) திங்கள் முதல் தொழிலுக்கு செல்வது எனவும் பேசி முடிக்கப்பட்டு உள்ளது.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...