மத்திய அரசு கொண்டுவரும் EIA 2020 சட்ட வரைவுக்கு எதிராகவும் அவற்றை திரும்ப பெறக் கோரியும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தஞ்சை தெற்கு மாவட்டம் அதிராம்பட்டினம் கிளை சார்பில், இணைய வழிப் போராட்டம் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில், அவ்வமைப்பின் தஞ்சை தெற்கு மாவட்டத்தலைவர் அதிரை கே. ராஜிக் தலைமையில், அதிராம்பட்டினம் கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துகொண்டு, ‘EIA-2020’ சட்ட வரைவுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகையை கையில் ஏந்தியவாறு முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியைக் கடைபிடித்து, தங்களின் எதிர்ப்பினை பதிவு செய்தனர்.