Thursday, April 18, 2024

அமித்ஷாவிற்கு இந்தியே தெரியாது, அதிமுக அமைப்பு செயலாளர் பொன்னையன் பொளேர்…!

Share post:

Date:

- Advertisement -

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்தியில் இரங்கல் கடிதம் எழுதி இருந்த நிலையில், . இதற்கு அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பொன்னையன் கண்டித்துள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் கடந்த 12ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். முதல்வரின் தாயார் மறைவுக்கு முக்கிய பிரமுகர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் இரங்கல் செய்தி வெளியிட்டனர். அந்த வகையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் முதல்வரின் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து கடிதம் அனுப்பி இருந்தார். ஆனால் அவரின் இரங்கல் கடிதம் இந்தியில் இருந்தது. இது மிகப்பெரிய சர்ச்சையானது.

இந்த நிலையில் முன்னாள் அமைச்சரும், அதிமுக அமைப்பு செயலாளராகவும் செய்தி தொடர்பாளருமான பொன்னையன் இந்த பிரச்னை குறித்து பேசும் போது, “அமித்ஷாவின் தாய்மொழி இந்தி இல்லை. இருப்பினும் அவர் இந்தியில் கடிதம் எழுதுகிறார் என்றால், இந்தி திணிப்பில் மத்திய அரசு எவ்வளவு வெறித்தனமாக இருக்கிறது என்பதற்கு இதுவே எடுத்துக்காட்டு” என்றார்..
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராக பகிரங்கமாக முன்னாள் அமைச்சர் பொன்னையன் தெரிவித்துள்ள இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...