அமெரிகாவின் அதிபருக்கான தேர்தல் இன்றுகாலை யில் இருந்து தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றன. குடியரசுக் கட்சி சார்ப்பில் தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் அதிபர் போட்டியிடுகிறார்.
ஜனநாயக் கட்சியின் சார்பில் அமெரிக்க அதிபர் வேட்பாளராகக் களம் காண்கிறார் ஜோ பிடன். துணை அதிபராக ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட இந்திய வம்சாவளி பெண் கமலா ஹாரீஸ் எதிரணிக்குக் கடும் போட்டி அளித்து வருகிறார்.
“முதல்கட்ட வாக்கு பதிவு கணிப்பின்படி ட்ரம்பை விடவும் ஜோ பிடன் முன்னிலையில் இருப்பதாகச் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன“
கொரொனா முன்னேற்ப்பாடுகளை ட்ரம்ப் சரியாக கையாளவில்லை என்பது ஒட்டுமொத்த குற்றச்சாட்டாக இருந்தாலும் இனவாதத்தை முன்னிருத்தி ஆட்சி செய்வதை அங்குள்ள மக்கள் ஏற்றுகொள்ள வில்லை என்பதை இக்கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளதாக முன்னனி ஊடகங்கள் வாயிலக தெரியவருகிறது.