கன்னியாகுமரி முதல் அந்தமான் வரையிலும் மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதால் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் நவம்பர் 16 ம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம், புதுக்கோட்டை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதிரையில் கடந்த சில வாரங்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் அதிரையில் அவ்வப்போது கரு மேகங்கள் சூழ்ந்து கும்மிருட்டாய் காட்சியளித்து மலைப்பிரதேசம் போல அதிகமான குளிர் நிலவி வருகிறது.