Friday, March 29, 2024

சென்னை ஐஐடி-யை தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகத்தில் 6 பேருக்கு கொரோனா உறுதி !

Share post:

Date:

- Advertisement -

தமிழகத்தில் கொரோனா வைரஸ் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக குறைந்து கொண்டே வந்தது. சென்னையில் தினமும் 1000-த்திற்கு மேல் இருந்த கொரோனா தொற்று எண்ணிக்கை தற்போது வெறும் 300 அல்லது 400 கணக்கில் உள்ளது.

இந்த நிலையில் திடீரென சென்னை ஐஐடி கொரோனா கிளஸ்டராக மாறியது. நேற்று வரை அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை 183 ஆக உயர்ந்தது.

இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவர்கள் கொரோனா மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். மற்ற மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவர்கள் விடுதியில் தங்கியிருந்ததாகவும் அனைவரும் ஆராய்ச்சி மாணவர்களாவர்.

இவர்கள் கல்லூரி வளாகத்தில் சமூக இடைவெளி கடைப்பிடிக்காமலும் மாஸ்க் போடாமலும் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் விடுதியில் தங்கியிருந்த மாணவர்களுக்கும் நேற்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் முதுநிலை மாணவர்கள் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு எந்த அறிகுறியும் இல்லை. இதை அண்ணா பல்கலைக்கழக டீன் இனியன் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...