Thursday, March 28, 2024

இந்தியாவிலும் தடம் பதித்த உருமாறிய கொரோனா – 20 பேருக்கு தொற்று உறுதி !

Share post:

Date:

- Advertisement -

இங்கிலாந்தில் அதிவேகமாக பரவி வரும் உருமாறிய கொரோனா வைரஸ் இப்போது இந்தியாவுக்கும் வந்துவிட்டது. இதுவரை வீரியமிக்க உருமாறிய கொரோனா வைரஸால் இந்தியாவில் 20 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதில் தமிழகத்தை சேர்ந்த ஒருவரும் உள்ளார் என்பது கவனிக்கத்தக்கது. உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்பட்ட 20 பேரும் லண்டனில் இருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஓராண்டுக்கும் மேலாக உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் இப்போது தான் படிபடியாக இந்தியாவில் குறையத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் புதிய அதிர்ச்சியாக லண்டனில் இருந்து இந்தியா திரும்பியவர்கள் மூலம் உருமாறிய கொரோனா இங்கும் நுழைந்துவிட்டது.

இந்த உருமாறிய கொரோனா வைரஸானது பழைய வைரஸை விட மிகவும் வீரியமானது. இதனால் ஏற்படும் பாதிப்புகள் மிகக் கடுமையானது. கடந்த நவம்பர் மாதம் 25-ம் தேதி முதல் டிசம்பர் 23-ம் தேதி வரை இங்கிலாந்தில் இருந்து இந்தியா திரும்பிய ஆயிரக்கணக்கானோரிடம் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

அதில் 20 பேருக்கு வீரியமிக்க உருமாறிய கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நேற்று வரை 6 பேருக்கு மட்டுமே உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்தது. இன்று மேலும் 14 பேருக்கு புதிதாக உருமாறிய கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்தியா முழுவதும் உருமாறிய கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள 20 பேர்களில் தமிழகத்தை சேர்ந்த ஒருவரும் இருக்கிறார்.

இதனிடையே ஆரம்பக்கட்டத்திலேயே இந்த விவகாரத்தை கண்காணித்து நடவடிக்கை எடுத்து வரும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் உருமாறிய கொரோனா தொற்றை இந்தியாவில் முற்றிலும் ஒழிக்க தீவிரம் காட்டி வருகிறது. கோவேக்சின் கொரோனா தடுப்பு மருந்துக்கு உருமாறிய கொரோனா வைரஸை அழிக்கும் ஆற்றல் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...