Friday, April 19, 2024

தஞ்சை அருகே தனியார் பேருந்து மின்கம்பத்தில் உரசி 5 பேர் பலி !

Share post:

Date:

- Advertisement -

தஞ்சாவூர் அருகே இன்று மதியம் லாரியை முந்த முயன்ற தனியார் பேருந்து பள்ளத்தில் பாயந்து அருகில் இருந்த மின்கம்பி உரசியதில் 2 பெண்கள் உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.

மன்னார்குடி – தஞ்சாவூர் – திருக்காட்டுப்பள்ளி – கல்லணை இடையே தனியார் பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.. கல்லணையில் இருந்து இன்று காலை புறப்பட்ட தனியார் பேருந்து திருக்காட்டுப்பள்ளி வழியாகத் தஞ்சாவூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தது.

இன்று மதியம் வரகூர் வந்த போது லாரியை முந்த முயன்றதால், இடது புறமாகச் சென்றதில் சாலையோரப் பள்ளத்தில் பாய்ந்தது. அப்போது, சாலையோரத்தில் நடப்பட்டுள்ள மின் கம்பங்களில் இணைக்கப்பட்டிருந்த மின்கம்பி மீது பேருந்தின் மேற்கூரை உரசியது.

இதனால் பேருந்தில் மின்சாரம் பாய்ந்ததில் அதில் பயணம் செய்த நடராஜன், மாரியப்பன், கல்யாணராமன், கவிதா, முனியம்மாள் ஆகிய 5 பேர் உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் 7 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். தகவல் அறிந்த திருக்காட்டுப்பள்ளி போலீசார் விபத்து நடந்த இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...