Thursday, April 25, 2024

அதிரை பேரூராட்சி செயல் அலுவலருக்கு ADC சார்பில் திருக்குர்ஆன் வழங்கப்பட்டது !

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் பேரூராட்சி செயல் அலுவலரை இன்று அதிரை தன்னார்வலர் அப்துல் மாலிக் சந்தித்து, கடற்கரைத்தெருவில் உள்ள பிரச்சனைகள் குறித்து ஏற்கனவே அளிக்கப்பட்டுள்ள மனுவில் நிறைவேற்றப்படாமல் உள்ளவற்றை விரைந்து செய்து தர கோரிக்கை விடுத்தார்.

அதிராம்பட்டினம் கடற்கரைத்தெரு சார்பாக கடந்த ஆண்டு அதிராம்பட்டினம் பேரூராட்சி செயல் அலுவலரிடம் கோரிக்கை மனு ஒன்று அளிக்கப்பட்டது. அதில் குடிநீர் பிரச்சனை, டைமர் ஸ்விட்ச், சாலை அமைத்தல், குப்பைகளை முறையாக அகற்றுதல், மின் கோபுர விளக்கு ,நாய் தொல்லை, வடிகால் பிரச்சனை உள்ளிட்டவற்றை சரிசெய்ய வேண்டும் என மனுவில் கூறியிருந்தனர்.

இந்நிலையில் இன்று சமூக ஆர்வலர் மாலிக் அளித்த மனுவில், கடற்கரைத்தெருவில் குடிநீர் பிரச்சனை, டைமர் ஸ்விட்ச், சாலை அமைத்தல், குடிநீர், குப்பைகளை முறையாக அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், தற்போது மின் கோபுர விளக்கு அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது அதனை அடுத்து நாய் தொல்லை மற்றும் வடிகால் பிரச்சனை மட்டும் தீர்க்கப்படாமல் உள்ளதாகவும், அதனையும் விரைந்து சரிசெய்து தர வேண்டும் என்றும் பேரூராட்சி செயல் அலுவலரிடம் மனுவாக கோரிக்கை விடுத்துள்ளார். மனுவை பெற்றுக்கொண்ட செயல் அலுவலர், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.

இறுதியாக அதிரை பேரூராட்சி செயல் அலுவலருக்கு அதிரை தாவா சென்டர் சார்பாக திருக்குர்ஆன் வழங்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...