நபிகள் நாயகத்தை பற்றி இழிவாக பேசிய பாஜக பிரமுகர் கல்யாணராமன் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யக்கோரி மல்லிப்பட்டினத்தில் அனைத்து இஸ்லாமிய ஜமாத் கூட்டமைப்பு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பாஜக பிரமுகர் கல்யாணராமன் நபிகள் நாயகத்தைப் பற்றி இழிவாக பேசியதை கண்டித்து நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் சாலை மறியல் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் ஜமாத் பேரவை மற்றும் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் ஒருங்கிணைந்து பாஜக மாநில நிர்வாகி கல்யாணராமன் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யக்கோரி கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் பெண்கள் உள்பட 500-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.