மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற பாஜக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன், இறைத்தூதர் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் குறித்து இழிவாக பேசியிருந்தார்.
இந்நிலையில் கல்யாணராமனை கண்டித்து வரும் 12/02/2021 வெள்ளிக்கிழமை ஜுமுஆ தொழுகைக்கு பிறகு பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் அதிரையில் உள்ள அனைத்து முஹல்லாவாசிகளும் கலந்துகொண்டு கண்டனத்தை பதிவு செய்ய வேண்டும் என பட்டுக்கோட்டை ஒருங்கிணைந்த முஸ்லீம் ஜமாஅத் சார்பில் அழைப்பு விடுத்துள்ளனர்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நமது அதிரை எக்ஸ்பிரஸ் முகநூல் பக்கத்தில் நேரலை செய்யப்படும்.