விடைபெறுகிறேன் என்பதை விட புதிய பயணத்தை தொடங்க இருக்கிறேன்
கல்லூரி வாழ்க்கை தொடங்கிய முதல் கூடவே சமூக வாழ்க்கையும் தொடங்கினேன் .
2017 ஆம் ஆண்டு உறவுகள் என்ற ஒன்றை 10 நபர்களால் தொடங்கினோம் அப்படியே கல்லூரி வாழ்க்கை முடிவு பெற்றது. இன்ஜினீயர் என்ற சொல்லோடு நிறுத்தி விட்டு உறவுகள் என்ற அங்கத்தை பெரிது படுத்தினோம்.
காலங்கள் சென்றது இறைவன் உதவியை கொண்டு உறவுகள் இன்று பல ஆதரவற்ற மக்கள், பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்று பலருக்கு உறவாய் இருந்து பணிகளை செய்து கொண்டு இருக்கிறோம் என்றாலும் சொந்த வாழ்க்கையில் நிறைய விஷயத்தை இழந்து விட்டேன் என்று கூட சொல்லலாம் .
வெளியில் சிரித்து கொண்டு உள்ளுக்குள் அழுத நாட்கள்… பல என்னுடன் பயணம் செய்யும் தோழர்கள் நன்கு அறிவார்கள்.
அடுத்த கட்டத்துக்கு நகர வேண்டும் என்று பார்த்தல் பொருளாதாரம் பெரிய நெருக்கடியாக இருந்தது என்ன செய்வது என்று தெரியாத சூழ்நிலையில் தற்போது சற்று அனைத்தையும் விட்டு விடை பெறுவதே நல்லது என்ற எண்ணத்தோடு வெளிநாட்டு வாழ்க்கையில் நானும் அங்கமாக இணைய உள்ளேன் .
வேலை கிடைத்து உள்ளது❤
சங்கடமான சூழ்நிலை என்றாலும்.. நான் விட்டு செல்லும் பணியை என் தோழர்கள் தொடர்வார்கள் என்ற நம்பிக்கை அதிகமாக உள்ளது உங்கள் அனைவரின் பிராத்தனையோடு பொது வாழ்க்கைக்கு சற்று ஓய்வு கொடுத்துவிட்டு விடைபெறுகிறேன்
அடுத்த நல்ல செய்தியையும் விரைவில் சொல்லிவிடுகிறேன் ..
நன்றி ..❤