சென்னையில் 46வது மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி கடந்த ஆறு நாட்களாக நடைபெற்றது.
தமிழ்நாடு ஸ்பெஷல் போலீஸ் 3வது பட்டாலியன் ஷூட்டிங் ரேஞ்ச் வீராபுரம் ஆவடியில் 02/03/2021 முதல் 07/03/2021 வரை நடைபெற்றது.
இப்போட்டியில் அதிரையை சேர்ந்த துப்பாக்கி சுடும் வீரர்கள் வஜீர் அலி மற்றும் தைஷீர் அலி ஆகியோர் கலந்துகொண்டார்கள்.
நடந்து முடிந்த துப்பாக்கி சுடும் போட்டியில் வஜீர் அலி 10 மீட்டர் AIR PISTOL NATIONAL RULES (NR) பிரிவில் கலந்துகொண்டு சான்றிதழ் பெற்றார். தைஷீர் அலி 10 மீட்டர் AIR PISTOL NATIONAL RULES (NR) பிரிவில் கலந்துகொண்டு சான்றிதழ் பெற்றார்.
இந்த போட்டியில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலிருந்து தலைசிறந்த வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.