Home » திமுகவின் கோட்டையாகிறது அதிரை நகரம் : உச்சகட்டத்தில் தேர்தல் களம்!!

திமுகவின் கோட்டையாகிறது அதிரை நகரம் : உச்சகட்டத்தில் தேர்தல் களம்!!

by admin
0 comment

தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 6 ம் தேதி சட்டமன்ற பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டதையடுத்து தேர்தல் பிரச்சார பணிகளில் அனைத்து அரசியல்கட்சிகளும் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் பட்டுக்கோட்டை தொகுதியில் நாம் தமிழர், அமமுக, அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் போட்டியிடுகிறது. இதில் திமுக சார்பில் போட்டியிடும் கா.அண்ணாதுரை, அதிமுக சார்பில் போட்டியிடும் என்.ஆர்.ரெங்கராஜன் ஆகியோருக்கு கடும் நேரடி போட்டி இருக்க வாய்ப்புள்ளது.

கடந்த காலங்களில் திமுக கூட்டணியில் இருந்த இந்திய தேசிய காங்கிரஸ், பட்டுக்கோட்டை தொகுதியில் என்.ஆர்.ரெங்கராஜனை களமிறக்கி வெற்றி கண்டது.

அதே போல 32 ஆண்டுகளுக்குப் பிறகு பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் சீனியர் அரசியல்வாதியான கா.அண்ணாதுரையை திமுக இந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் களமிறக்கியுள்ளது.

பட்டுக்கோட்டை தொகுதியில் உள்ள அதிரையை பொறுத்தவரை என்.ஆர்.ரெங்கராஜன், கா.அண்ணாதுரைக்கு சம பலத்தில் செல்வாக்குகள் இருந்தாலும், இம்முறை அதிரை மக்கள் 75% சதவீதம் பேர் திமுக கூட்டணிக்கு வாக்களிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இன்னும் 2 அல்லது 3 நாட்களில் தேர்தல் பிரச்சாரம் முடியவுள்ள உச்சகட்ட நிலையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter