Friday, March 29, 2024

நெறிமுறைகளை பின்பற்றி நோன்பு கஞ்சி விநியோகியுங்கள் – ஜமாஅத்துல் உலமா அறிவுறுத்தல்!

Share post:

Date:

- Advertisement -

கொரோனா தொற்று உச்சம் அடைந்து வரும் நிலையில், தமிழகத்தில் நாளை திங்கட்கிழமை முதல் கடும் கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன. அதில் ஒரு பகுதியாக வழிபாட்டு தலங்களில் பொதுமக்களுக்கு அனுமதியில்லை என்ற அறிவிப்பு குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் முஸ்லீம்களுக்கு ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், அல்லாஹ்வின் நாட்டத்தை பொருந்திக் கொள்ளும் வகையில் தமிழக அரசின் ஆணையை ஏற்று வரும் 30/04/2021 வரை அனைத்து தொழுகைகளையும் வீடுகளிலேயே நிறைவேற்றிக் கொள்ளுமாறு இஸ்லாமியர்களை கேட்டுக்கொண்டுள்ளது.

பள்ளிவாசல் பணியாளர்கள் பள்ளியில் தொழுகை நடத்த அனுமதி உள்ளதால், ஐவேலைத் தொழுகையையும் தராவீஹ் தொழுகையையும் பள்ளிப் பணியாளர்களை கொண்டு நிறைவேற்றி கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளிவாசலில் இஃப்தார் நிகழ்ச்சிகள் நடத்த வேண்டாம் என்றும், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நோன்பு கஞ்சி காய்ச்சி மக்களுக்கு வழங்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...