Friday, April 19, 2024

ஆளூர் ஷாநவாஸுக்கு கொலை மிரட்டல் விடுத்த பாஜக நிர்வாகி இரவோடு இரவாக அதிரடி கைது!

Share post:

Date:

- Advertisement -

விசிக எம்எல்ஏ ஆளூர் ஷாநவாஸுக்கு பாஜக நிர்வாகி ஒருவர் கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நபர் நேற்று போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

தமிழக சட்டசபை திமுக கூட்டணி 159 இடங்களில் மாபெரும் வெற்றிபெற்று ஆட்சியை பிடித்துள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி அரசு வரும் வெள்ளிக்கிழமை பதவி ஏற்கிறது.

திமுக கூட்டணியில் இடம்பெற்று இருந்த விசிக 2 பொதுத்தொகுதி உட்பட 4 தொகுதிகளில் வென்றது. திமுக கூட்டணியில் விசிக வேட்பாளர் ஆளூர் ஷாநவாஸ் நாகை தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.

இந்த நிலையில் ஆளூர் ஷாநவாஸுக்கு பாஜக நிர்வாகி ஒருவர் கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சை பாஜக இளைஞரணியைச் சேர்ந்த நிர்வாகி, பாஜகவின் இளைஞரணி பக்கத்தில் இந்த மிரட்டலை வெளிப்படையாக விடுத்தார். அதில், தமிழகத்தில் 4 தொகுதிகளில் பாஜக வென்றுவிட்டது.

தமிழகத்தில் தாமரை மலர்ந்துவிட்டது. இதற்காக உழைத்த அனைத்து பாஜக நிர்வாகிகளுக்கும் நன்றி. தமிழகத்தில் பாஜகவின் வெற்றியை கொண்டாடும் வகையில் தேர்தலில் வெற்றி பெற்ற பாஜகவினர் எல்லோருக்கும் விரைவில் வெற்றி பரிசாக ஆளூர் ஷாநவாஸின் மரண செய்தி வரும் என நினைக்கிறேன், என்று சர்ச்சைக்குரிய வகையில் குறிப்பிட்டு இருந்தார்.

தஞ்சை பாஜக இளைஞரணியின் பேஸ்புக் பக்கத்தில் வெளியான இந்த போஸ்ட் பெரிய அளவில் சர்ச்சையானது. வெளிப்படையாக சமூக வலைத்தளங்களில் எம்எல்ஏ ஒருவருக்கு எதிராக பாஜகவினர் இப்படி கொலைமிரட்டல் விடுத்த செய்த பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் பெரிதான நிலையில் பாஜக நிர்வாகி மீது தஞ்சை மாவட்ட காவல்துறை பல்வேறு வழக்குகளின் கீழ் பதிவு செய்தது.

கொலை மிரட்டல், வன்முறையை தூண்டுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதியப்பட்டன. இதையடுத்து நேற்று இரவோடு இரவாக அந்த பாஜக நிர்வாகி போலீசாரால் கைது செய்யப்பட்டார். கொலை மிரட்டல் விடுத்ததாக கூறி, போலீசார் நேற்று அவரை கைது செய்தனர். தவறுதலாக போஸ்ட் செய்துவிட்டேன், நான் யாருக்கும் கொலை மிரட்டல் விடுக்கவில்லை என்று அந்த நபர் போலீசார் விசாரணையில் மன்னிப்பு கேட்டதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...