Friday, April 19, 2024

இஸ்ரேல்-ஹமாஸ் போர் முடிவுக்கு வந்தது : வீதிகளில் உற்சாகமாக கொண்டாடிய பாலஸ்தீன் மக்கள்!(படங்கள்)

Share post:

Date:

- Advertisement -

கடந்த இரண்டு வாரங்களாக பாலஸ்தீனத்தின் மீது அத்துமீறி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹமாஸ் எப்போதும் இல்லாத அளவுக்கு பதிலடி தாக்குதல் நடத்தியது. இப்படி தொடர்ந்து 11 நாட்களாக இரு நாடுகளிலும் மிக பெரிய சேதமும் உயிர் பலியும் ஏற்பட்டது.

இதனையடுத்து இன்று அதிகாலை 2 மணியளவில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் போர்நிறுத்தத்தை அறிவித்தது. மேலும் பாதுகாப்பு அமைச்சரவை அறிக்கை “பரஸ்பர மற்றும் நிபந்தனையற்றது” என்று கூறியது.

இதை ஹமாஸ் ஏற்றுக்கொண்டு இந்த ஒப்பந்தம் வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணிக்கு (இங்கிலாந்து நேரம் நள்ளிரவு) தொடங்கும் என்று ஹமாஸ் உறுதிப்படுத்தியிருந்தது.

கடந்த 11 நாட்களாக நீடித்து வந்த சண்டையில் சுமார் 230 பாலஸ்தீனர்களும் , 12 இஸ்ரேலியர்களும் கொல்லப்பட்டதோடு நூற்றுக்கணக்கான கட்டிடங்களும் பலத்த சேதமடைந்துள்ளது. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன ஹமாஸ் போர் நிறுத்தம் காரணமாக பாலஸ்தீன மக்கள் வீதிகளில் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...