Friday, April 19, 2024

கொரோனாவால் உயிரிழந்த மதிமுக துணைப் பொதுச்செயலாளர் – அடக்கம் செய்த தஞ்சை தெற்கு மாவட்ட TNTJ வினர்!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு வடக்கூர் பகுதியை சேர்ந்தவர் துரை.பாலகிருஷ்ணன். இவர் மதிமுகவின் மாநில துணைப் பொதுச்செயலாளராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் துரை. பாலகிருஷ்ணன், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு நேற்று முன்தினம்(24/05/2021) மரணம் அடைந்து விட்டார்.

அவரின் உடலை அடக்கம் செய்வதற்கு அவரது குடும்பத்தினர் TNTJ தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் சுகாதாரத்துறையின் வழிகாட்டுதலின் படி TNTJ முன் களப்பணியாளர்களால் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

கொரோனாவால் உயிரிழந்த மதிமுக துணைப் பொதுச்செயலாளர் துரை. பாலகிருஷ்ணனின் உடலை அடக்கம் செய்த தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் ஹாஜா ஜியாவுதீன் உள்ளிட்ட குழுவினருக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரை. வையாபுரி பாராட்டு தெரிவித்தார். இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 23 நபர்களின் உடல்களை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் தஞ்சை தெற்கு மாவட்டத்தினர் அடக்கம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...