நேற்றைய தினம் அதிரை அரசு பொது மருத்துவமனையை ஆய்வு செய்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பொதுமக்களின் கோரிக்கைகளையும் கேட்டறிந்தார். அமைச்சரின் வருகையால் அங்கு பரபரப்பு நிலவிய சூழலில் முறையாக சீலிட்ட கவரில் மனுவை வைத்து அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் அதிரை நகர திமுக செயலாளர் இராமகுணசேகரன் நீட்டினார். அதனை கவனித்த அமைச்சர் அந்த மனுவை பெற்று பரிசீலனை செய்வதாக கூறி தனது உதவியாளரிடம் ஒப்படைத்தார். அந்த மனு குறித்து நம்மிடம் பேசிய இராமகுணசேகரன், சுற்றுவட்டார பகுதிகளின் மக்கள் தொகை பெருக்கத்தையும் கிழக்கு கடற்கரை சாலையில் நிகழும் விபத்துக்களையும் கருத்தில் கொண்டு அதிரை அரசு மருத்துவமனையை 24 மணிநேரமும் செயல்படும் வகையில் தரம் உயர்த்த கோரி அமைச்சரிடம் மனு அளித்திருப்பதாக கூறினார்.
பரப்பரப்புகளுக்கு மத்தியில் மனுவை நீட்டிய அதிரை இராமகுணசேகரன்!