Saturday, April 20, 2024

பெட்ரோல்,டீசல் விலை உயர்வை கண்டித்து மல்லிப்பட்டிணத்தில் மீனவர்கள் நூதன போராட்டம்..

Share post:

Date:

- Advertisement -

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து மல்லிப்பட்டினத்தில் மீனவர்கள் கட்டுமர படகை தோளில் சுமந்து நூதன முறையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் துறைமுகத்தில் பெட்ரோல் டீசல் எரிபொருள் விலை உயர்வைக் கண்டித்தும் மத்திய அரசு அதனை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியும் விசைப்படகு மீனவர்கள் சங்கம் சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் தமிழ்நாடு மீனவர் பேரவை மாநில பொதுச்செயலாளர் மல்லிபட்டினம் தாஜூதீன் மற்றும் ஏராளமான விசைப்படகு மீனவர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர் அப்போது மீனவர்கள் ஆரம்ப காலத்தில் புழக்கத்திலிருந்த கட்டுமரத்தை தள்ளுவண்டியில் வைத்து தள்ளியும் மீனவர்கள் கட்டுமரத்தை தோளில் சுமந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்பு செய்தியாளரிடம் தேசிய மீனவர் பேரவை தலைவர் தாஜூதீன் கூறுகையில், மத்திய அரசு மீனவர்களுக்கு டீசல் உற்பத்தி விலைக்கே வழங்க வேண்டும். மீனவர்கள் மீது தேவையற்ற வரிவிதிப்பு போடக்கூடாது. தொடர்ந்து எரிபொருள் விலை உயர்ந்தால் அனைத்து மாவட்ட மீனவர்களை ஒன்று திரட்டி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...