திருச்சியிலிருந்து திருவாரூருக்குச் செல்லும்
வழியில் தஞ்சாவூருக்கு செவ்வாய்க்கிழமை
மாலை வந்த தமிழக முதல்வருக்கு திமுக
நிர்வாகிகள், தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர். திருவாரூரில் புதன்கிழமை நடைபெறவுள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சிக்கு செவ்வாய்க்கிழமை மாலை வந்தார். இதையடுத்து, திருச்சியிலிருந்து திருவாரூர் நோக்கி காரில் புறப்பட்டார்.
வழியில் தஞ்சாவூர் மேல வஸ்தா சாவடியில்
மேம்பாலம் அருகே முதல்வருக்குத் தமிழக
அரசின் தலைமைக் கொறடா கோவி. செழியன், மக்களவை உறுப்பினர்கள் எஸ்.எஸ். பழனிமாணிக்கம் (தஞ்சாவூர்), செ. ராமலிங்கம் (மயிலாடுதுறை), சட்டப்பேரவை உறுப்பினர்கள் துரை. சந்திரசேகரன், சாக்கோட்டை க.அன்பழகன், டி.கே.ஜி. நீலமேகம், கா. அண்ணாதுரை, என். அசோக்குமார், திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோர்
நூல்கள், பொன்னாடைகள் கொடுத்து
வரவேற்பு அளித்தனர். சிலர் கோரிக்கை
மனுக்களும் கொடுத்தனர்.