தஞ்சை மாவட்டம்,சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சி, மல்லிப்பட்டிணம் பேருந்து நிலையம் அருகே உயர்மின் கோபுர விளக்கு அமைத்து தர மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சுவாதி காமராஜிடம் மல்லிப்பட்டிணம் திமுக கிளை செயலாளர் கோரிக்கை வைத்தார்.இதனை பரிசீலனை செய்வதாக சுவாதி காமராஜ் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கோரிக்கையை ஏற்று மல்லிப்பட்டிணம் பேருந்து நிலையம் அருகே அமைத்து தர விரைவில் பணிகள் நடைபெறும் என உறுதியளித்தார்.