Friday, April 19, 2024

பொறியியல் முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் எப்போது ? அண்ணா பல்கலைக்கழகம் முக்கிய அறிவிப்பு!

Share post:

Date:

- Advertisement -

அண்ணா பல்கலைக்கழகம் இன்று (20/10/2021) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “பொறியியல் முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் வரும் நவம்பர் 1- ஆம் தேதி முதல் தொடங்கும்.

நவம்பர் 15- ஆம் தேதி முதல் முதலாமாண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடங்கி நடைபெறும். இறுதியாண்டு மாணவர்கள் விடுதிகளைக் காலி செய்த பின் முதலாமாண்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்பு நடைபெறும். அடுத்தாண்டு மார்ச் 7- ஆம் தேதி முதலாமாண்டு மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு தொடங்கும்.

நடப்பு கல்வியாண்டு முதல் பொறியியல் படிப்புக்கு புதிய பாடத்திட்டத்தை அறிமுகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. பாடத்திட்டத்தின் பெரும் பகுதி தொழில்துறையின் பங்களிப்பு இடம் பெறும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. வேலை வாய்ப்பு திறன்களை மாணவர்கள் மேம்படுத்திக் கொள்ளும் வகையில் புதிய பாடத் திட்டம் உருவாக்கப்படவுள்ளது. முதற்கட்டமாக முதலாமாண்டு மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டில் புதிய பாடத்திட்டத்தை அறிமுகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.” இவ்வாறு பல்கலைக்கழக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...