எஸ்டிபிஐ கட்சியின் தமிழ் மாநில பொதுக்குழு கூட்டம் தஞ்சையில் கடந்த இரு நாட்களாக நடைபெற்று வருகிறது. பொதுக்குழுவின் முதல் நாளான நேற்று எஸ்டிபிஐ கட்சியின் தேசிய தலைவர் பைஜி துவக்கவுரையாற்றினார்.
அதனைத்தொடர்ந்து மாநில தலைவர் நெல்லை முபாரக், மாநில பொதுச்செயலாளர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உரையாற்றினர்.
பொதுக்குழுவின் இரண்டாம் நாளான இன்று, 2021-2024 வரையிலான புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். புதிய நிர்வாகிகள் விவரம் :
மாநில தலைவர் : நெல்லை முபாரக்
மாநில துணைத்தலைவர்கள் : S.M. ரபீக் அஹமது, B. அப்துல் ஹமீது
மாநில பொதுச்செயலாளர்கள் : M. நிஜாம் முகைதீன், அச. உமர் பாரூக், S. அகமது நவவி
மாநில பொருளாளர் : S. அமீர் ஹம்ஸா
மாநில செயலாளர்கள் : T. ரத்தினம், A. அபூபக்கர் சித்தீக், ஏ.கே. கரீம், நஜ்மா பேகம்
இவர்களின் பதவிக்காலம் 3 ஆண்டுகள்(2021-2024) என்பது குறிப்பிடத்தக்கது.