Thursday, March 28, 2024

அதிரையில் வண்டியை மறித்து தாக்கிய கும்பல்! ஒருவர் படுகாயம்!!

Share post:

Date:

- Advertisement -

அதிரை அடுத்த புதுப்பட்டினத்தை சேர்ந்த முகமது பஷீர், பழைய அட்டைப்பெட்டிகளை சேகரித்து விற்பனை செய்யும் தொழில்புரிந்து வருகிறார். இவர் வழக்கம்போல் நாகப்பட்டினம் உள்ளிட்ட ஊர்களுக்கு சென்று டாடா ஏஸ் வண்டியில் பழைய அட்டைப்பெட்டிகளை சேகரித்துவிட்டு சொந்த ஊர் திரும்பியுள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் தம்பிக்கோட்டை அருகே  வந்தபோது இருசக்கர வாகனம் ஒன்று திடீரென கிழக்கு கடற்கரை சாலையில் ஏறியபோது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டது. உடனே வண்டியை நிறுத்தியபோது அங்கே இருந்த சிலர் ஆக்ரோஷமாக கத்திக்கொண்டு பஷீரை தாக்க துரத்தினர். இதனால் அச்சமடைந்த அவர், அதிரை காவல் நிலையத்திற்கு செல்வதற்காக வாகனத்தை இயக்கினார். இதனிடையே இருசக்கர வாகனங்களில் விரட்டிக்கொண்டு வந்த மர்மநபர்கள், அதிரை டி.வி.எஸ். சோரூம் அருகே வண்டியை மறித்து கண்மூடித்தனமாக தாக்கினர். அப்போது அப்பகுதியில் நின்றிருந்த பொதுமக்கள் சிலர், அந்த கும்பலிடமிருந்து பஷீர் மற்றும் நஸ்ருதீன் ஆகியோரை காப்பாற்றி மீட்டனர். இதனையடுத்து நேரடியாக காவல் நிலையம் சென்ற பஷீர், நடந்த சம்பவம் குறித்து அதிகாரிகளிடம் விளக்கினார். கும்பல் தாக்குதலால் படுகாயடைந்த அவர், அதிரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து காவல்துறையிடம் பஷீர், புகார் மனு அளித்துள்ளார். இதனிடையே காவல் நிலையம் வராமல் கும்பல் தாக்குதலில் ஈடுபட்ட மர்ம நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...