அதிராம்பட்டினம் நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சுமார் 400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கல்வி பயின்று வருகிறார்கள்.
சமீபத்தில் பெய்த தொடர் கன மழையினால் பள்ளியின் வகுப்பறைகளை மழை நீர் சூழ்ந்தது.
இதனை தற்காலிக நடவடிக்கையாக அவ்வப்போது மோட்டார் உதவியுடன் நீரை வெளியேற்றி வந்தனர்.
இந்த நிலையில் கடைசியாக பெய்த மழை நீரை அகற்றமால் அப்படியே தேங்கி நிற்கிறது.
பள்ளியின் பின்புறம் உள்ள வடிகாலை தூர்வாரி செப்பனிட்டு முறையாக வடிகால் வசதி செய்து தர பல முறை பள்ளியின் நிர்வாகம் கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் நீர் வெளியேற வழியின்றி பள்ளியின் உள்ளேயே நீர் தேங்கி கொசு உற்பத்தி கூடமாகவே காட்சியளிக்கிறது.
இதிலிருந்து பரவும் கொசுக்கடியால் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் டெங்கு உள்ளிட்ட உயிரை குடிக்கும் கொடிய நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.