Thursday, March 28, 2024

அதிரையில் தொடங்கும் உள்ளாட்சி போர் ! யாருக்கு எந்த வார்டு? உத்தேச முடிவுகள் !!

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் நகர உள்ளாட்சி தேர்தலுக்கான ஆயத்த பணிகளை அந்தந்த கட்சி பிரமுகர்கள் கையாண்டு வருகிறார்கள்.

உள்ளாட்சி பதவிகளுக்கு விரைவில் தேர்தல் நடத்த இருப்பதாக வெளியான தகவலை அடுத்து அனைத்து கட்சி நிர்வாகிகளும் பம்பரமாக சுழன்று வருகிறார்கள்.

இந்த நிலையில் கும்பகோணம், அதிராம்பட்டினம் நகர விரிவாக்க பணியின் காரணமாக தேர்தல் தள்ளிபோகும் வாய்ப்பு உருவாகி இருந்தாலும் சில வார்டுகளில் துண்டு போட்டு வைக்கும் பணிகளை கவுன்சிலர் பதவிக்கு காத்திருக்கும் நபர்கள் செய்து வருகிறார்கள்.

அதன்படி முக்கிய பிரமுகர்கள் வசிக்கும் 13வது வார்டில் மும்முனை போட்டி நிலவும் சூழல் உருவாகி இருக்கிறது.

அதேபோல முன்னாள் சேர்மன் வீடமைந்துள்ள பகுதியின் வார்டில் மட்டும் 5முனை எனவும் ஆளும் கட்சியின் துணை செயலாளர் வார்டில் 4முனை போட்டியும் நிலவுவதாக முதற்கட்ட ஆய்வில் தெரியவருகிறது.

குறிப்பாக 10 வது வார்டில் மட்டும் இயந்திர குடும்ப பின்னனி தீர்மானிக்கும் நபர்களே வெற்றிக்கு உரியவர் என்பதால் 10ல் மட்டும் சத்தம் காட்டவில்லை.

இது முதற்கட்ட ஆய்வின் அடிப்படையில் தொகுக்கப்பட்ட விடயம் என்பதால் கூடுதல் தகவல்களை விரைவில் எதிர்பாருங்கள்.

துள்ளியமான துடிபுள்ள செய்திகளை காண இணைந்திருங்கள்…. நமது அதிரை எக்ஸ்பிரஸ் இணைய துடிப்புடன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...