Thursday, March 28, 2024

அதிரையில் 110KV துணை மின் நிலையத்தை விரைந்து அமைத்திடுக – அமைச்சரிடம் அதிரை நூவன்னா கோரிக்கை!

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினத்தில் நேற்று நடந்த மக்களை தேடி முதல்வர் என்ற நிகழ்வில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துக் கொண்டு மக்களிடம் நேரடியாக கோரிக்கை மனுக்களை பெற்றார்.

குறிப்பாக அதிரை நகருக்கு தேவையான அத்தியாவசிய அடிப்படை தேவைகள் உள்ளிட்டவற்றையும், முதியோர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, பட்டா உள்ளிட்ட தனிநபர் கோரிக்கைகளையும் மக்கள் மனுக்களாக அளித்தனர்.

ஆயிரத்திற்கும் அதிகமாக மனுக்கள் இம்முகாம் வாயிலாக தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு அளிக்கப்பட்டது. அதில் ஒரு கோரிக்கையாக, அதிராம்பட்டினம் சமூக ஆர்வலர் நூவன்னா தனியே மனு ஒன்றை அளித்தார். அதில் அதிரை நகருக்கு அத்தியாவசிய தேவையான நகருக்கு 110கிலோ வாட் துணை மின் நிலையம் அமைக்க துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், தாம் சார்ந்துள்ள 17வார்டு பகுதியில் வாழும் ஆதரவற்ற முதியோர்கள், மாற்றுத் திறனாளிகள் உதவித்திட்டம் இவைகளை உடனடியாக செய்து தர வேண்டும் என்ற கோரிக்கைகள் அடங்கிய மனுவை அமைச்சரிடம் நேரடியாக அளித்தார்.

மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சர் இதுகுறித்து உரிய நடவடிக்கைகளை உரிய இலாக்கா மூலமாக எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...