கொரோனா பரவல் காரணமாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டு மாணவர்களுக்கு இணையவழி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த சூழலில் தஞ்சாவூர் மாவட்ட 10th, +2 மாணவர்களுக்கான இணையவழி அடைவு தேர்வுக்கான அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் 27ம் தேதி முதல் மாணவர்களுக்கான தேர்வு துவங்குகிறது. பள்ளிக்கல்வித்துறை சார்பில் வழங்கப்பட்ட முதல் திருப்புதல் தேர்வுக்கான பாட திட்டத்தில் இருந்து 25 கேள்விகள் கேட்கப்படும் என அறிவித்திருப்பதுடன், google sheet முறையில் தேர்வு எழுத 40 நிமிடம் வழங்கப்படும் என்றும் தேர்வு முடிந்த உடனே தங்களுக்கான மதிப்பெண்களை மாணவர்கள் தெரிந்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.