அதிராம்பட்டினம் நகராட்சிக்கான தேர்தல் சமீபத்தில் முடிந்தது.
27வார்டுகளில் திமுக 19 இடங்களில் வென்று உள்ளன இதனால் நகர் மன்ற தலைவராக வெற்றி பெற்ற திமுக பெண் ஒருவர் மறைமுக தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட இருக்கிறார்.
இதற்கான ஆயத்த பணிகள் ஜரூராக நடந்து வரும் சூழலில், குறிபிட்ட அந்த குடும்பத்தினர் குறித்து தேவையற்ற குற்றச்சாட்டுகள் கூறி காணொளி ஒன்று வைரலாகி வருகிறது.
இது குறித்து MMS குடும்பத்தை சார்ந்த ஒருவர் ஆடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
அதில் திட்டமிட்டு பரப்பபடும் அந்த வீடியோவில் தமது குடும்பம் குறித்து தவறாக குறிப்பிட்டதுடன், சேர்மனாக சிலருடன் சேர்ந்து சதிதிட்டம் தீட்டுவதாக அதில் இடம்பெற்று இருக்கிறது.
இதுகுறித்து அக்குடும்பத்தினர் கூறுகையில், அரசியல் பாடம் படித்த ஆசான் குறித்தே திட்டமிட்டு பரப்பப்படும் அவதூறு பிரச்சாரத்தை மக்கள் நம்ப தயாராக இல்லை என கூறினார்.
வாய்ப்புகளுக்கும், பதவிகளுக்கும் நாம் எப்போதும் துடித்ததில்லை எனவும்,தேடி வரும் நிலைக்கு நாம் உயர்ந்திருக்கின்றோம் ஆதலால்தான் வாய்ப்புகளும், பதவிகளும் தேடி வருகின்றது என்றார்.