Home » அதிரை: அந்த நாய்கள கொல்லுங்கய்யா…. மூதாட்டிய விரட்டியதால் ஆவேசம் !

அதிரை: அந்த நாய்கள கொல்லுங்கய்யா…. மூதாட்டிய விரட்டியதால் ஆவேசம் !

by
0 comment

அதிராம்பட்டினம் ஆணைவிழுந்தான் குளக்கரை அறிவிக்கப்படாத குப்பை கிடங்காகவே செயல் பட்டு வருகிறது.

13வது வார்டு உறுப்பினர் பதவியேற்று முதல் பணியாகவே அதனை சுத்தம் செய்திட நடவடிக்கைகள் மேற் கொண்டார் ஆனால் பொறுப்பற்ற பொது ஜனம் அதற்கு ஒத்துழைப்பு கொடுக்க வில்லை.

இதனால் நாள்தோறும் இங்கு குப்பைகள் குவிந்த வன்னம் உள்ளது இதனை நகராட்சி ஊழியர்களும் அவ்வப்போது அள்ளி வருகிறார்கள்.

இந்த நிலையில் இன்றுகாலை தொக்காலிகாட்டை சேர்ந்த அன்புஜம் என்ற மூதாட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்துள்ளார் அப்போது ஆணைவிழுந்தான் குளக்கரை அருகே நின்று கொண்டிருந்த தெரு நாய்கள் சில மூதாட்டிய விரட்டியுள்ளது.

நாயிடமிருந்து தப்பிக்க ஓடிய மூதாட்டி கால் இடறி கீழே விழுந்துள்ளார்.

இதனிடையே அவ்வழியாக சென்ற ஒருவர் மூதாட்டியை மீட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார்.

கால் இடறி கீழே விழுந்த மூதாட்டிக்கு உதவ வந்த நபர்களிடம் அவர் அந்த நாய்களை கொல்லுங்கய்யா என விரட்டிய நாய்களை காட்டி ஆவேசமாக கத்தியுள்ளார்.

எப்பா….புளூ கிராஸ்ஸு… மனிதனை கடித்து குதறும் நாய்களை என்னப்பா பன்னுறது ?

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter