Friday, March 29, 2024

“சிரித்துக்கொண்டே சொன்னால் அது வன்முறைக் கருத்து அல்ல” – டெல்லி உயர்நீதிமன்ற கருத்தால் சர்ச்சை!

Share post:

Date:

- Advertisement -

டெல்லியில் சி.ஏ.ஏவுக்கு எதிராக போராட்டம் நடைபெற்ற சமயத்தில் பா.ஜ.க அமைச்சர் அனுராக் தாக்கூர், போராட்டக்காரர்களுக்கு எதிராகச் செயல்படுமாறு அழைப்பு விடுத்த நிலையில், இது தொடர்பான வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளது.

கடந்த 2020ஆம் ஆண்டில் பா.ஜ.க அரசின் குடியுரிமைச் சட்ட ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே டெல்லியில் கடும் வன்முறை வெடித்தது. இந்த வன்முறை தொடர்பாக வெறுப்புக் கருத்துகளை விதைத்த ஒன்றிய பா.ஜ.க அமைச்சர் அனுராக் தாக்கூர் மற்றும் பா.ஜ.க எம்.பி பிரவேஷ் வர்மாவுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யக்கோரிய முந்தைய மனுவை விசாரணை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் விசாரித்தது. விசாரணையின்போது ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர் மற்றும் பா.ஜ.க எம்.பியுமான பிரவேஷ் வர்மா ஆகியோரின் பேச்சுக்களில் வகுப்புவாத கருத்து என்ன இருக்கிறது என டெல்லி உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

மேலும், “நீங்கள் புன்னகையுடன் எதையாவது சொன்னால் குற்றமில்லை, புண்படுத்தும் வகையில் ஏதாவது சொன்னால், குற்றமாகும்” என்று நீதிபதி சந்திர தாரி சிங் கூறினார். பிருந்தா காரத் மற்றும் டெல்லி போலிஸ் தரப்பு வழக்கறிஞர்களின் வாதங்களைக் கேட்ட உயர்நீதிமன்றம், மனு மீதான தீர்ப்பை ஒத்திவைத்தது.

பா.ஜ.க அமைச்சரின் வன்முறையைத் தூண்டும் பேச்சு தொடர்பான வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...