பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தும் “மக்களாட்சியை பாதுகாப்போம்” என்ற தேசம் தழுவிய பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக அதிரை பேருந்து நிலைத்தில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் வழக்கறிஞர் Z.முஹம்மது தம்பி உரை ஆற்றினார். அப்போது பேசிய அவர், இந்திய மக்களுக்காக ஆட்சி நடத்தாமல் ஆர்.எஸ்.எஸ் பார்ப்பனர்களுக்காக மட்டுமே பாஜக ஆட்சி செய்வதாக குற்றம்சாட்டினார். இஸ்லாமிய வெறுப்புணர்வை வைத்து மட்டுமே ஆட்சி நடத்துவதால் நாட்டின் பொருளாதாரம் சீரழிந்து விட்டதாக சுட்டிக்காட்டிய முகம்மது தம்பி, இந்து பெண்களுக்கும் பாஜக ஆட்சியில் பாதுகாப்பு இல்லை என தெரிவித்தார். பின்னர் மக்களாட்சியை பாதுகாக்க அனைவரும் போராட வேண்டும் என அழைப்புவிடுத்தார்.
முன்னதாக இந்நிகழ்ச்சிக்கு நகர தலைவர் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார். நகர செயலாளர் ராஜிக் வரவேற்புரை ஆற்றினார், PFI, SDPI செயவீரர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.