பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை பற்றி தமிழக ஆளுநர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார். அதனைத் தீவிரவாத அமைப்பு என்றும் ஐஎஸ் போன்ற அமைப்புகளுக்கு ஆள்பிடித்துத் தருகிற அமைப்பு என்றும் பாஜகவை சேர்ந்தவர்கள் பேசுவதை போல, ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்வர்கள் பேசுவதை போல, ஆளுநர் பொறுப்பில் இருப்பவர் பேசுவது அதிர்ச்சியளிக்கிறது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
சங்பரிவார்கள் தமிழ்நாட்டைக் குறிவைத்து விட்டார்கள்; வன்முறைக்கு வித்திடுகிறார்கள்; மத அடிப்படையிலான வெறுப்பு அரசியலை தீவிரப்படுத்துகிறார்கள் என்பதற்கு அவரது இன்றைய பேச்சு ஒரு சான்றாக இருக்கிறது என்றும், இச்சூழலில், ஜனநாயக சக்திகள் யாவரும் விழிப்போடு இருக்க வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.