Home » அதிரையில் தோன்றிய திடீர் வெளிச்சம்! இது தான் காரணம்!! துரிதமாக செயல்பட்ட மின்வாரிய ஊழியர்கள்!!

அதிரையில் தோன்றிய திடீர் வெளிச்சம்! இது தான் காரணம்!! துரிதமாக செயல்பட்ட மின்வாரிய ஊழியர்கள்!!

0 comment

அதிரையில் இரவு 9.30 மணியளவில் திடீரென பெரும் வெளிச்சம் ஒன்று தோன்றியது. சிறிது நேரம் நீடித்த அந்த வெளிச்சத்தால் அது என்னவென்று தெரியாமல் மக்கள் குழப்பமடைந்தனர். மேலும் அதனை தொடர்ந்து அதிரையில் குறைந்த அழுத்த மின்சாரம் நிலவியது. இதனையடுத்து தகவலறிந்த மின் வாரிய பணியாளர்கள், வெளிச்சம் வந்த திசையை நோக்கி பயணித்து சுரைக்காய்க்கொல்லையில் எச்.டி லைன் துண்டானதை கண்டறிந்தனர். பின்னர் சில மணிதுளிகளில் அந்த பழுதை நீக்கி மீண்டும் சீரான மின் இணைப்பை வழங்கினர். இந்நிலையில், துரிதமாக செயல்பட்டு சீரான மின் சாரம் கிடைக்க செய்த மின்வாரிய ஊழியர்கள் சேகர், சேக் தாவூத் ஆகியோருக்கு பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter