Friday, March 29, 2024

முத்துப்பேட்டை: குடிநீர் பிரச்சினையை தீர்க்க வேண்டும் – பேரூராட்சி முற்றுகை –

Share post:

Date:

- Advertisement -

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும் குடிநீர் வழங்கலில் கடந்த இரண்டு மாதங்களாக பிரச்சனை நீடித்து வருகிறது.

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிரந்தர செயல் அலுவலர் இல்லாமல் இயங்கிக் கொண்டிருக்கும் முத்துப்பேட்டை தேர்வுநிலை பேரூராட்சி நிர்வாகம் முறையாக குழாய்களில் நீர் வினியோகம் செய்யப்படுவது இல்லை.

இதுகுறித்து SDPI மன்ற உறுப்பினர்கள் பேரூராட்சி நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றும் பலனில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று காலை
05, 08, 12, 14 மற்றும் 15 ஆகிய வார்டுகளைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் SDPI கட்சியின் மன்ற உறுப்பினர்கள் காலி குடங்களுடன் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உடனடியாக ADSP திரு.வெள்ளத்துரை தலைமையிலான காவல்துறையினர் அங்கு வந்து சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

கோடை சீசன் தொடங்கியுள்ள நிலையில் குடிநீர் வழங்கலை சமாளிக்க திட்டமிடுவதை விடுத்து, ‘மேலிடத்தில் கேட்டுச் சொல்வதாக’ மன்றத் தலைமை பொறுப்பற்ற பதிலை சொல்லிக் கொண்டிருக்கிறது என்றும் இதற்கு நிரந்தர தீர்வை ஏற்படுத்த வேண்டும் என ஆர்பாட்டகாரர்கள் கோஷமிட்டனர்.

இதனிடையே அதிகாரிகளிடம் காவல் உயரதிகாரிகள் நடத்திய பேச்சு வார்த்தையில் விரைவாக இப்பிரச்சினை தீர நிரந்தர நடவடிக்கைகள மேற்கொள்ளப்படும் என்று உறுதி அளித்ததை அடுத்து போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...