மயிலாடுதுறை மாவட்டம் சங்கரன்பந்தல் இலுப்பூரை சேர்ந்தவர் முஹம்மது ஆசிக். 16 வயதான இவரை, கடந்த 11-05-2022 முதல் காணவில்லை என 14-05-2022 அன்று நமது அதிரை எக்ஸ்பிரஸ் தளத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
இந்நிலையில் மேற்கூறப்பட்ட முஹம்மது ஆசிக், இன்று 17-05-2022 செவ்வாய்கிழமை காலை கோவை உக்கடம் பகுதியில் கிடைத்துவிட்டார் என அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். மேலும் முஹம்மது ஆசிக்கை கண்டுபிடிக்க உதவிய அனைவருக்கும் தங்கள் நன்றியையும் தெரிவித்துள்ளனர்.
மேலும் காணாமல்போன முஹம்மது ஆசிக் கிடைத்துவிட்டதால், இனி அவரை காணவில்லை என்று வந்த செய்திகளை சமூக வலைத்தளங்களில் யாரும் பகிர வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.