Tuesday, December 2, 2025

அதிரை வந்த செகந்திராபாத்-ராமேஸ்வரம் சிறப்பு ரயில் – அதிரையர்கள் உற்சாக வரவேற்பு!(படங்கள்)

spot_imgspot_imgspot_imgspot_img

செகந்திராபாத் – ராமேஸ்வரம் வாராந்திர சிறப்பு விரைவு ரயில் திருவாரூர் – காரைக்குடி மார்க்கத்தில் இம்மாதம் முதல் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது. செகந்திராபாத் – ராமேஸ்வரம்(வண்டி எண் : 07685) இடையே வரும் ஆகஸ்ட் 24ம் தேதி முதல் டிசம்பர் 28ம் தேதி வரை வாரம் ஒருமுறை புதன்கிழமைகளில் இயக்கப்படுகிறது. மறுமார்க்கத்தில் ராமேஸ்வரம் – செகந்திராபாத்(வண்டி எண் : 07686) இடையே வரும் ஆகஸ்ட் 26ம் தேதி முதல் டிசம்பர் 30ம் தேதி வரை வாரம் ஒருமுறை வெள்ளிக்கிழமைகளில் இயக்கப்படுகிறது.

இந்த ரயில் செகந்திராபாத் ரயில் நிலையத்தில் இருந்து புதன்கிழமை 7.30 மணியளவில் புறப்பட்டு இன்று வியாழக்கிழமை காலை சென்னை எழும்பூர் வந்து, மாலை 4.34 மணியளவில் அதிராம்பட்டினம் வந்தடைந்து பட்டுக்கோட்டை, காரைக்குடி, மானாமதுரை வழியாக ராமேஸ்வரம் சென்று சேருகிறது.

16 ஆண்டுகளுக்கு பிறகு அதிரையில் இருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து அதிரைக்கும் நேரடியாக ரயில் சேவையை வழங்கும் இந்த ரயில், செகந்திராபாத்தில் இருந்து நேற்று புறப்பட்டு சென்னை வழியாக இன்று மாலை 5.50 மணியளவில் அதிரை வந்தது. அதிரை வந்த ரயிலில், அதிரையர்கள் பலர் சென்னையில் பயணம் செய்து அதிரையில் வந்திறங்கினர். அப்போது அங்கு ரயிலை வரவேற்க கூடியிருந்த அரசியல் கட்சியினர், சமுதாய இயக்கத்தினர், பொதுமக்கள் என அனைவரும் ரயிலுக்கு உற்சாக வரவேற்பு அளித்ததுடன், ரயில் ஓட்டுநர்களுக்கு பொன்னாடை அணிவித்தும் வரவேற்பு அளிக்கப்பட்டது.

செகந்திராபாத்-ராமேஸ்வரம் வாராந்திர சிறப்பு ரயிலை அதிரை மற்றும் சுற்றியுள்ள மக்கள் அதிகமாக பயன்படுத்தும்போது, து நிரந்தரமாக்கப்பட வாய்ப்பு உள்ளது என்றும், திருவாரூர் – காரைக்குடி வழித்தடத்தில் மேலும் பல விரைவு ரயில்கள் புதிதாக விடுவதற்கு வாய்ப்பு உள்ளது என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

வாராந்திர சிறப்பு ரயில் அட்டவணை:

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி!

அதிராம்பட்டினம் ஜமாத்துல் உலமா சபை மற்றும் காதர்முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இணைந்து “போதை அழிவின் பாதை – விழிப்புணர்வே விடிவு” என்ற...

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)

அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...

அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!

நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில் இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...
spot_imgspot_imgspot_imgspot_img