அமெரிக்காவின் சிகாகோ நகரில் ஞாயிற்றுக்கிழமை 44வது மாரதான் போட்டி நடைபெற்றது. உலக புகழ்பெற்ற இந்த 42.2 கிலோ மீட்டர் தூர மாரத்தான் போட்டியில் 40ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில் அதிரை கடற்கரை தெரு சவுரியப்பா குடும்பத்தை சேர்ந்த A.முகம்மது (S/o NMA.அப்துல் லத்தீப்) கலந்து கொண்டு நிர்ணயிக்கப்பட்ட தூரத்தை முழுமையாக கடந்து பதக்கம் மற்றும் சான்றிதழை வென்றார். ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை பார்த்து வரும் இவர், மாரதான் போட்டியில் பங்கேற்பதற்காக மட்டுமே அமெரிக்கா சென்றது குறிப்பிடத்தக்கது.