இங்கிலாந்தில் பிரிட்டிஷ் தமிழ் கிரிக்கெட் கம்யூனிட்டி ஆண்டுதோறும் லீக் தொடரை நடத்தி வருகிறது. நடப்பு ஆண்டுக்கான தொடர் கடந்த செப்டம்பரில் நடத்தப்பட்டது. 8 அணிகள் பங்கேற்ற தொடரில் ஒரு சதம் மற்றும் இரண்டு அரைசதம் உட்பட மொத்தம் 419 ரன் எடுத்த ஸ்பர்தான் சிசி அணியின் அதிரை கிரிக்கெட் வீரர் அப்துல் கபூர் (s/o கமால்) பிரிட்டிஷ் தமிழ் கிரிக்கெட் லீக்கின் சிறந்த பேட்ஸ்மேனுக்கான மெரிட் விருதை தட்டிச்சென்றார். இந்த விருது லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அப்துல் கபூருக்கு வழங்கப்பட்டது. இவர் அதிரை AFCC அணியின் முன்னாள் கேப்டன் என்பது குறிப்பிடதக்கது.